tamilnadu

img

‘job in crisis’ இணையதளம் வாலிபர் சங்கம் துவக்கியது

சென்னை, ஜுன் 26- கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த இளைஞர்களின் கருத்துக்களை ஒருங்கிணைக்க புதிய இணையதளத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கியுள்ளது.  இந்தியாவில் 15 கோடி பேருக்கு மேல் கொரோனா காலத்தில் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை ஒருங்கிணைக்க http://www.jobsincrisis.in/ta/ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த இணையதளத்தை வெள்ளியன்று திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு துவக்கி வைத்தார்.